சனி, 2 மே, 2009

ஒபாமாவின் புது குழப்பம்

ஏற்கனவே கணினி துறையிலிருப்பவர்கள் மடியில் நெருப்பு கட்டிக்கொண்டிருக்கின்றனர். அதை ஊதி மேலும் எரிய வைத்துள்ளார் ஒபாமா. இந்தியாவில், பங்களுருவிலுள்ள கம்பனிகளுக்கு அவுட் சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் இனிமேல் தங்கள் நாட்டிற்குள்ளே உள்ள நிறுவனங்களுக்குள் அவுட் சோர்சிங் செயதால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும் என்று அறிவித்துள்ளார். இது நம்மவர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. கால் சென்டெர் போன்ற துறைகளில் இருப்பவர் பாடு இனி திண்டாட்டம் தான். ஏற்கனவே, ஐடி துறையிலிருந்து அரசு நிறுவனங்களுக்கும், இன்ஜினியரிங் காலேஜ் வாத்தியார் வேலைக்கு போவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: