செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரன் மரணத்தால் யாருக்கு லாபம் ?

இலங்கை ராணுவத்தால் சுடப்பட்டு பின் கண்டெடுக்கப்பட்டதாகவும் , அது பிரபாகரனின் உடல்தான் என்று அதை அவருடைய பழைய பார்ட்னர் கருணா உறுதிப்படுத்தியதாகவும் பிரபாகரனின் சடலக் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பியது. அதுமட்டுமின்றி டிஎன்ஏ பரிசோதனையில் அது பிரபாகரன் தான் என்றும், அவரது அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டு உறுதி செய்யப்பட்டது எனவும் அதில் சொல்லப்பட்டது. (வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் http://www.youtube.com/watch?v=EaSL7XinAvk ) இது உண்மையோ , பொய்யோ தெரியாது. ஆனால், இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட கண்டிப்பாக நம்மூர் அரசியல்வாதிகள் முயல்வர்.
பிரபாகரனின் மறைவினால் யர்ருக்கு நன்மை. இந்தியாவிற்க்கா அல்லது இலங்கைக்கா என்றால் அது இந்தியாவிற்குத்தான். சிலருக்கு நிம்மதி பெருமூச்சு, சிலருக்கு அரசியல் ஆதாயம். ஆனால் மக்கள் மனதில் பிரபாகரன் என்றும் ஹீரோ தான். எப்படி சதாமின் மறைவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேப்போல் இப்போதும் நம் மனதில் அவர் நீங்கா இடம் பெற்றுள்ளார் என்பதே உண்மை. இந்த முடிவு மற்றொரு தொடக்கத்துக்கு ஆரம்பமாக இருக்கலாம். அது இலங்கை தமிழர்களின் மறு மலர்ச்சியாக இருந்தால் அவர்களின் தியாகம் வெற்றிப்பெறும்.

கருத்துகள் இல்லை: