போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் என் பிள்ளைகளுக்கு காபினெட் பதவி வாங்குவதிலேயே என்று கண்ணும் கருத்துமாய் டெல்லியில் தவமிருக்கும் தமிழ்நாட்டு முதல்வருக்கு பிரபாகரன் பற்றிய செய்திகள் கலக்கமடைய செய்தாலும், அதைப்பற்றி துளியும் சட்டைசெயயாமல் முதலில் போனவேலை ஆகட்டும் , பிறகு பிரபாகரனை பற்றி ஒரு இரங்கற்ப்பா முரசொலியில் எழுதி வெளியிட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். அப்புறம் வீரமணியிடம் சொல்லி ஒரு மனித சங்கிலி , உண்ணா விரதம் போன்றவை நடத்திவிட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டால் பிரபாகரனை நாடு மறந்து விடும், அப்புறமென்ன, அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை சமாளித்து விடலாம். பிரபாகரன் இருந்தாலும் அரசியல் , இறந்தாலும் அரசியல். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !
வரும் சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு, ராமதாசையோ , விஜய்காந்தையோ இப்போதே தயார் செய்ய வேண்டும். நமக்கு பிரபாகரன் இருந்தால் என்ன ? செத்தால்என்ன ? தமிழ் எனக்கு உயிர் மூச்சு, அங்கே தமிழனின் உயிர் போச்சு, எனக்கு என் குடும்பம்தான் பெருசு. மக்கள் எப்போதும் இளித்தவாயர்கள் . எப்படியும் அரசியல் செய்துவிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக