வியாழன், 21 மே, 2009

தமிழ் நாட்டு அரசியலும், பிரபாகரனின் மரணமும்

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் என் பிள்ளைகளுக்கு காபினெட் பதவி வாங்குவதிலேயே என்று கண்ணும் கருத்துமாய் டெல்லியில் தவமிருக்கும் தமிழ்நாட்டு முதல்வருக்கு பிரபாகரன் பற்றிய செய்திகள் கலக்கமடைய செய்தாலும், அதைப்பற்றி துளியும் சட்டைசெயயாமல் முதலில் போனவேலை ஆகட்டும் , பிறகு பிரபாகரனை பற்றி ஒரு இரங்கற்ப்பா முரசொலியில் எழுதி வெளியிட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். அப்புறம் வீரமணியிடம் சொல்லி ஒரு மனித சங்கிலி , உண்ணா விரதம் போன்றவை நடத்திவிட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டால் பிரபாகரனை நாடு மறந்து விடும், அப்புறமென்ன, அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை சமாளித்து விடலாம். பிரபாகரன் இருந்தாலும் அரசியல் , இறந்தாலும் அரசியல். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !
வரும் சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு, ராமதாசையோ , விஜய்காந்தையோ இப்போதே தயார் செய்ய வேண்டும். நமக்கு பிரபாகரன் இருந்தால் என்ன ? செத்தால்என்ன ? தமிழ் எனக்கு உயிர் மூச்சு, அங்கே தமிழனின் உயிர் போச்சு, எனக்கு என் குடும்பம்தான் பெருசு. மக்கள் எப்போதும் இளித்தவாயர்கள் . எப்படியும் அரசியல் செய்துவிடலாம்.

கருத்துகள் இல்லை: