வாருங்கள் பேசலாம்
" நாம் படித்ததை, கேட்டதை பகிர்ந்துகொள்வோம்"
வெள்ளி, 24 பிப்ரவரி, 2012
பக்கத்து வீட்டு மாலதியின் பாத்ரூம்
வியாழன், 16 பிப்ரவரி, 2012
மருத்துவ காப்பீடு எடுக்கப் போகின்றீர்களா?
- 18 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்
திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்த பரிசோதனை போன்றவை தேவைப்படும். - 31 முதல் 40 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
- 41 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் மற்றும் விரிவான பரிசோதனைகள் விவரம் தேவைப்படும்.
மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் ஒரு வாரத்திற்கு முன் நம்மை நாமே தயார் செய்து கொள்ளவேண்டும். நாம் உட்கொள்ளும் உப்பு , இனிப்பு போன்றவற்றின் அளவை எப்போதையும்
புதன், 28 ஜூலை, 2010
வெள்ளி, 4 ஜூன், 2010
32 நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் 19வது உலக கோப்பை கால் பந்து போட்டிகள் வரும் ஜூன் 11 ஆம் தேதி தென் ஆப்பரிக்க நாட்டில் கோலாகலமாக துவங்க உள்ளது. இதுவரை நடந்த 18 போட்டிகளில் ஐந்து முறை பிரேசிலும் , நான்கு முறை இத்தாலியும் மூன்று தடவை ஜெர்மனியும், இரண்டு தடவை அர்ஜென்டினாவும், உருகுவேயும் ஒரு முறை இங்லாந்தும், பிரான்சும் வெற்றி பெற்றுள்ளன.
2006 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த போட்டியில் இத்தாலி, பிரான்சை வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இதில் பிரான்ஸ் வீரர் ஜிடேன தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த இத்தாலி வீரர் மார்கோ மட்டேர்ஜியை தலையால் முட்டி நிலை குலைய செய்ததை உலகம் இன்றும் மறக்காது.
பல்வேறு பிரச்சன்னைகளுக்குப்பின் அர்ஜென்டினாவின் பயிற்சியாளராக உருவெடுத்திருக்கும் பிரபல வீரர் மரடோனோ, இந்தமுறை தனது அணி கோப்பையை வெல்லும் என உறுதி கொண்டிருக்கிறார். அப்படி நடக்கும் பட்சத்தில் அதை கொண்டாடும் விதமாக மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்றும் சூளுரைத்திருக்கின்றார்.
இந்த உலக கோப்பையில் விளையாடவுள்ள பந்தின் பெயர் "ஜபுலாணி" என்பதாகும். இதற்க்கு "கொண்டாட்டம்" என்று பொருள். இதில் 11 வண்ணங்கள் உள்ளன. இது கால்பந்து வீரர்கள் எண்ணின்க்கை 11 ஐ குறிக்கும், மேலும் இந்த போட்டியை நடத்தும் நாட்டிலுள்ள 11 இன மக்களையும், அங்கு பேசப்படும் 11 மொழிகளையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வீரர்களிடையே இந்தப் பந்தைப்பற்றி கொண்டாடமில்லை. இது ஒன்றும் சொல்லி கொள்ளுவது போல் மிதக்கும் பந்து அல்ல, சூப்பர் மார்க்கட்ல் விற்கப்படும் பிளாஸ்டிக் பந்து போலுள்ளது என்று வீரர்களிடையே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இப்படி பலவிதமான எண்ணங்களுடனும், ஆரூடங்களுடனும் ஆரம்பிக்க இருக்கும் இப்போட்டியானது வரும் ஒரு மாத காலத்திற்கு ரசிகர்களின் தூக்கத்தை மறக்க செய்யப்போவது என்னமோ உண்மைதான்.
இப்போதே, எல் சி டி தொலைக்கட்சிபெட்டிகளும், சாட்டிலைட் ஓளிபரப்பும் தங்கள் வியாபாரத்தில் சூடு பிடிக்கத்தொடங்கி விட்டன.
வியாழன், 17 டிசம்பர், 2009
புதன், 16 டிசம்பர், 2009
நாம் வேடிக்கையாக சிலரைப் பார்த்து "பழம் தின்று கொட்டை போட்டவர்" என்று சொல்வதுண்டு. ஆனால் அது பறவைகளுக்கு தான் பொருந்தும். ஆம் ! பறவைகள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக காடு விட்டு காடு தாண்டி, கடல் தாண்டி, கண்டம் தாண்டி செல்கின்றன. அப்படி போகும் போது, வழியில் உள்ள மரங்களின் கனிவகைகளை தின்று கொட்டைகளை போட்டுச் செல்லும். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கேட்கத் தோணும். பறவைகளின் இந்த பழம் தின்று கொட்டை போடும் பழக்கமானது, தாவர இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறதென்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம். சற்று விவரமாக பார்ப்போம்.
பறவைகள், வழியில் உள்ள மரங்களின் கனிவகைகளை தின்று இளைப்பாறிச்செல்லும். போகும் போது, அது தின்ற கனிகளின், சதை பகுதி மட்டும் அதன் வயிற்றில் செரிமானம் ஆகி, கொட்டைப்பகுதியை அதன் எச்சத்துடனோ அல்லது அப்படியே சாப்பிடாத கொட்டையாகவோ வழியில் இட்டுச் செல்லும். இப்படி கிழே விழுந்த கொட்டைகள் , மண்ணில் விழுந்து முளைத்து, பெரிய தாவரமகிறது. இதை சில சமயங்களில் நாம், பெரிய கட்டிடங்களில் கூட மரங்கள் வளர்வதை பார்த்திருக்கிறோம்..
பறவை ஆராய்ச்சியாளர்கள் பழம் தின்று கொட்டைப்போடும் பறவைகளின் இந்த செயல்களால், தாவர இனப்பெருக்கம் அதிகமாக நடக்கிறது என்றும், அந்நிய தாவர இனபுகுதலும் இதனால் சாத்தியமாகிறது என்றும் கண்டு பிடித்துள்ளனர். மேலும் உலகின் சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் புவி வெப்பமாவது காடுகளின் செழிப்பால் தடுக்கப்படுகிறது.. மக்களின், தேவைகளுக்காக காடுகள் ஒரு பக்கம் அழிக்கப்பட்டாலும்,
பறவைகளின் மூலம் தாவர இனப்பெருக்கம் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது என்பது தான் உண்மை. பறவைகள் தங்கள் சுயநலத்திலும், பொதுநல சேவை செய்கின்றன. அதிலும், சில குறிப்பிட்ட பறவை இனங்கள் தங்கள் இரைக்காக அதிக பழங்களை அடிக்கடி உண்டு, நிறைய கொட்டைகளை போடுவதால், தாவர இனப்பெருக்கம் தடையின்றி இருப்பதாக சொல்கிறார்கள். அதனால்,பழம் தின்று கொட்டை போடுவதை இனிமேல் சாதரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
செவ்வாய், 27 அக்டோபர், 2009
பதிவர்கள் பலவிதம் என்ற தலைப்பில் பதிவர் நண்பர்கள் பலர் கூடி விவாதித்துள்ளனர், இதனை நண்பர் லதானந்த் தன பதிவில் சுவைபட எழுதி இருந்தார். அதில், பதிவர்களின் தன்மை, வகை பற்றி பார்க்கும் போது நகைச்சுவையாக இருந்தாலும் அதன் கருத்து என்னவோ ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது.
இன்றைய பதிவர்கள் தமெக்கென்று தனி பாணியை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களின் தகவல்கள் புதியவையாக இல்லாவிடினும், பதிவில் அதை சொல்லும் முறையில் தான் மற்றவர்களால் ரசிக்கப் படுகிறார்கள்.
பதிவர்களின் அணுகும் முறையை பற்றி சில சுவையான விதங்களை பார்ப்போம்.
சமையல் குறிப்புப் பதிவர்கள்
நெட்டுலயோ சமையல் பொஸ்தகங்களையோ ’சுட்டு’ சொந்த வார்த்தைகளில ‘தாளிச்சு’ப் பரிமாறிருவாங்க.
உலக எனிமா சாரி சினிமாப் பதிவர்கள்
இவிங்க கொல தெய்வம் கூகிளாண்டவர்.
சமுதாய முன்னேத்திப் பதிவர்கள்
அப்பப்ப திங்க் பண்ணி சமுதாயத்த முன்னேத்த கடுமையா முயற்சி பண்ணிட்டு மறுக்காவும் தங்க வேலையப் பாக்கப் போயிருவாங்க. ”ரெட் சிக்னல்ல நிக்காம போனவனப் பாத்து எனக்கு அஞ்சு நிமிசம் எதுவுமே சாப்புட முடியாம போச்சு லெஃப்டல ஓவர் டேக் பண்ணுனவனப் பாத்து மூட் அவுட்டாயி உண்ணொரு “போத்தல்” அடிச்சேன்”கிற மாதிரி சமுதாய ஒணர்வு மிக்கவிங்க இவிங்க.
”ஏதாவது செய்யற” பதிவர்கள்
நெமபப் பொறுப்புணர்ச்சி மிக்கவிங்க இவிங்க.லேத், டிங்கரிங், பெயிண்டிங், ரிவிட், மாதிரியான வேலைக்கெல்லாம் ஏற்பாடு செய்வாங்க.
பல கூடுப் பதிவர்கள்
ஒண்ணுக்கு மேல பதிவுகள் வெசிருப்பாங்க. (ஒண்ணுக்குனா தப்பா நெனைச்சிராதீங்க! ஒரே ஆசாமி பல பதிவுகள் வெச்சிருப்பாங்கனு சொல்ல வந்தேன்). சொந்தமா எழுதுறதுக்கு ஒண்ணு. மத்தவிங்களத் திட்டுறதுக்கு ஓண்ணுனு இருக்கும். அனானியாய்க் கமெண்ட்டு போட முடியாத சீழ்நெலமையிலும் சாரி - சூழ்நெலமையிலும் கமெண்ட் மாடரேட் பண்ணியிருக்கிறப்போவும் திட்டுறதுக்காகவே ஒரு அய்டி கிரியேட் பண்ணி இருக்குற புண்ணியவானுங்க இவிங்க.
நாட்குறிப்புப் பதிவர்கள்
“காலைல எந்திரிச்சேன். காப்பி குடிச்சேன். கரகரனு வந்துச்சு. ஆபீஸ் போனேன். அங்கியும் வந்துச்சு”. அப்படினு ஆனந்தரங்கம்பிள்ளைனு நெனைசுக்கிட்டு ”அபூர்வ தகவல்களை” அள்ளி வீசுவாங்க. (ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு பத்தித் தெரியாதவிங்களுக்கு சந்திரமௌளீஸ்வரன் விளக்கம் தருவாரா?)
டபுள் ஆக்ட் பதிவர்கள்
ஒரே பதிவரு ஒரே பிளாக்குல ரெண்டு பேர் பேர்ல எழுதுவாங்க. மாறி மாறி அவிங்களே பின்னூட்டமும் போட்டுக்குவாங்க. நெம்ப டமாஸா இருக்கும்.
டூப்ளிகேட் பதிவர்கள்
ஒரிஜினலா எழுத லேசா கஷ்டம் இவிங்களுக்கு. மித்தவிங்க எழுதுறத லேசா மாத்தி எழுதிக்குவாங்க. கேட்டாக்க எதிர்ப் பதிவும்பாங்க. ”என்னைய நம்பி இருக்கிறவிங்கள் நாம ஏமாத்தக் கூடாது பாத்தீங்களா?” அப்படிம்பாங்க. ஒரு கான்ஸப்ட் ஹிட் ஆயிருச்சுனா அத ஒடனடியா லபக்கீருவாங்க.
பச்சோந்திப் பதிவருங்க
பிளாக்குல ஆகா ஓகோனு முன்னேத்தக் கருத்துங்கள திருகலான நடையில எழுதுவாங்க. எழுதுன ஈரம் காயறதுக்குள்ள கூசாம சிபாரிசுக்கும் போவாங்க.
சரோஜாதேவிப் பதிவருங்க
இப்பல்லாம் சரோஜாதேவி புக்ஸ் அதிகமா இல்லைங்கிற கொறைய இட்டு நெரப்புறவிங்க இவிங்க. மண்டை கிண்டைனு சரளமா எழுதுவாங்க. பீர்ல 3000, 5000 அப்படினு இருக்கிற மாதிரி நெம்பர் போட்டு விட்டு ஆட்டுவாங்க.
நாட்டாமைப் பதிவர்கள்
பதிவுலகத்துல எங்க எப்பச் சண்டை சாடி நடந்துச்சுனாலும் இவிங்களுக்குக் கொண்ட்டாடம்தான். ஒடனடியாப் போயி அதிரடியா நாட்டாமை பண்ண ஆரமிச்சிருவாங்க. சமயத்துல திருக்குறள் எல்லாம் கோட் பண்ணுவாங்க.
பரஸ்பரக் கைப் பதிவர்கள்
எனக்கு நீ ஒனக்கு நான் அப்படிங்கிற உயரிய கோட்பாடு இவிங்களது. இவிங்களுக்கு ‘மொய்க்கு மொய்ப் பதிவர்கள்’னு உண்ணொரு பேரும் இருக்குது.
டவுன்லோடு பதிவர்கள்
எதப் பத்தி வேணும்னலும் எழுதுவாங்க. பறவைக் காச்சலா, பணியாரம் சுடுறதா, கேட் வாக் பத்தி எழுதுறதா கேக் செய்யிறதப் பத்தி எழுதுறதா எத வேணும்னாலும் எழுதுவாங்க. டவுன்லோடு இருக்கறவரைக்கும் இவிங்க அதி மேதாவிங்கதான்.
மெனி இன் ஒன் பதிவர்கள்
பர்மா பஜார் பாஷையிலும் எழுதுவாங்க பண்டிதன் மாதிரியும் எழுதுவாங்க. கொங்குப் பேச்சிலும் எழுதுவாங்க கொமுரிகளப் பத்தியும் எழுதுவாங்க.
நன்றி திரு லதானந்த் http://lathananthpakkam.blogspot.com
செவ்வாய், 21 ஜூலை, 2009
இந்தியாவில் மிக நீளமான ரயில்வே பாலம்
கேரளமாநிலம், கொச்சியில் இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பாலம் வேம்பநாடு குளத்தின் குறுக்காக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் நீளம் 4.62 கி மீ ஆகும். இதற்க்கு, முன்பாக பிகார் மாநிலத்தின் தெஹ்ரி அருகில் சோனே நதியின் குறுக்காக உள்ள நேரு சேது ரயில் பாலம் தான் மிக தூரமனதாக கருதப்பட்டு வந்தது. இப்போது, இந்த வல்லர்பதம் பாலம் அதை விட ஒரு கி. மீ. அதிகமாக அமைய உள்ளது. இந்த பாலமானது, மிக குறுகிய காலத்தில், அதாவது பதினெட்டு மாதங்களில், சுமார் ரூ 297.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கிட்டதட்ட 36000 டன் சிமெண்டும், 11,000 டன் இரும்பும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்காக 133 தூண்கள் நீருக்குள் சுமார் 40 - 55 அடி ஆழத்தில் அஸ்திவாரம் போடப்பட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த பெருமை மிக்க வல்லர்பதம் ரயில் பாலமானது வரும் நவம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
திங்கள், 15 ஜூன், 2009
புதன், 3 ஜூன், 2009
செவ்வாய், 2 ஜூன், 2009
சந்தோசமான ஊழியராக இருக்க யோசனைகள் பத்து
5) உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதில் கவனமாய் இருங்கள் .
செவ்வாய், 26 மே, 2009
மன்மதனின் முடிவு
இதற்குள் மேலே ஏறி வந்த பரணி, என்ன பாய், சௌக்கியமா..... என்றபடியே உள்ளே வந்தான். ஆங்! .. நீ .. நீ.. எப்படி இங்கே என்று மென்று விழுங்கினேன் . இவனை பார்த்ததுமே பலவித சிந்தனைகள் மனதில் தோன்றி பயமுறுத்தின, இவன் ஏன் இப்போ வந்தான், இங்கத்தான் தங்கபோரனா ? நம்ம பட்ஜெட்டுக்கு, இவன் வேற சோதனையா, எப்படியாவது பேசி, தொறத்திர வேண்டியது தான். என்ன பரணி, திடு திப்புன்னு வந்து நிக்கற!.. என்ன ஊர்லே கடை இருந்ததே ? எப்படி போய்க்கிட்டு இருக்கு, என்று மெதுவாக அவன் வருகை பற்றிய காரணம் அறிய முற்பட்டேன் .
காலேஜ் மாணவிகளுக்கு, ஏதாவது ஓசி கொடுத்து, அயன் படத்தில் சூர்யா, தமன்னாவை சரிக்கட்டுவது போல் பேசி அவர்களை வசப்படுத்திவிடுவான். இவனுடைய லீலைகளை கேட்டு ஜொள்ளு விடுவதே மற்றவர்களின் பொழுது போக்கு. இப்படி இருக்கும் போது, தலைவர் காதலில் மாட்டிக்கொண்டு, அவளுக்கு லவ் லெட்டர் எழுதி கொடுப்பது என்வேலையாக இருந்தது . இப்படிதான் பரணியின், கடை மூலதனம் எல்லாம் கரைந்து கடைசியில் கடனில் முழ்கியது. கடன் கொடுத்த பக்கத்து வீட்டு மாமி கடன் வசூலிக்க மாமாவை அனுப்பிச்சு வசூலாகதலால் அவரே பரணியிடம் கடன் வசூலிக்க வந்து பின் அவனின் மன்மத லீலையில் சிக்கியது தான் அங்கு ஹைலைட். பிறகு சாப்பாட்டிற்கே கஷ்ட்டப்பட்டு, அண்ணன் வீட்டிலேயே தஞ்சம், அங்கு பக்கத்து வீட்டுக்காரர் தங்கச்சி அவன் மீது அக்கறைப்பட்டு , சாப்பாடு கொடுக்கப்போக, பட்சி படிந்து விட்டது, இப்படியே மன்மத பானங்களை தொடுத்து, தொடுத்து கடைசியில் வீ . டி நோய்க்காக சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. அப்புறம், நான் வேலைக்காக சென்னை வந்து விட்டபடியால் அவனைப்பற்றி ஏதும் தெரியவில்லை.
இப்படிப்பட்ட ஆள் நம்மை கிட்டதட்ட நான்கு வருடங்கள் கழித்து என்னைத்தேடி சென்னைக்கு வந்தது கொஞ்சம் ஆச்சரியமும் , கலககமும் அடையச்செய்தது. என்னய்யா ! அப்படி முழிக்கிறே ...... என்று என் நினைவுகளை தகர்த்தான் பரணி. அது வந்து ... ஒண்ணுமில்லை ..... ரொம்ப நாள் கழிச்சு பர்க்கிறேன்லே ......அதான். அவனை குளிக்கச்செய்து, டிபன் சாப்பிட அழைத்துச்சென்றேன். அப்புறம் , என்ன விஷயம், ஊர்லே எல்லோரும் சௌக்கியமா? என்று.... பேச்சை ஆரம்பித்தேன். பின் என் நிலைமையை மெதுவாக சொல்லினேன். இந்தா ..... பாரப்பா, .... இங்க லாட்ஜ்லே ரொம்ப ஸ்ட்ரிக்ட் , கெஸ்ட் தங்கறது பிரச்சனை, வாட்ச்மேன், இரண்டு நாள் தான் பார்ப்பான் ....பின்னே, நீ இங்கே தங்கறது பிரச்சனை தான் .....என் நிலமைய புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன் என்றேன் . .. இதைக்கேட்டதும் ..... நீ ஒன்னும் கவலைபடாதே, என் பெட்டி மட்டும் இங்கே, இருக்கட்டும், மத்ததே நான் சமளிச்சுக்கிறேன்னு, எனக்கு சமாதானம் சொன்னான். அப்போ ... நீ ... எங்க தங்குவே என்று கேட்க முடியாமல் கேட்டேன். இரண்டு, நாள் பார்க்கலாம், என் மாமா இங்கத்தா, ஆவடிலே இருக்கார், அவரைபர்த்துட்டா...அப்புறம் எல்லாம் சரியாயிடும், என்னாலே ஊருக்கு திரும்ப போக முடியாது, என் பிரண்டு இங்க எனக்கு வேலை இருக்கு வான்னு ... சொல்லிருக்கான்அதனாலே, நீ கவலை பட வேணாம்... ரைட் ... உன் பெட்டிய மட்டும் இங்க வச்சுக்க, நான் ஆபிசுக்கு போயிட்டு சயங்கலமா ஆறு மணிக்கு வந்துருவேன், என்று அவன் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்ட நிம்மதியில், பஸ் ஏறி ஆபிஸ் சென்றேன்.