வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

பக்கத்து வீட்டு மாலதியின் பாத்ரூம்


இன்னைக்காவது பக்கத்துக்கு வீட்டு மாலதி குளிக்கும் போது எப்படியாவது அதை பார்த்து விடவேண்டும்! அதை நெனைக்கும் போதே  மனதிற்குள்  பட்டம் பூச்சிகள் பறந்தன. இரண்டு முறை ட்ரை பண்ணியாச்சி, காரியம் கை கூடவில்லை.
 ஒரு முறை முயற்சித்த போது மாலதியின் வீட்டுக்காரர் வந்து விட்டார், அவரிடம் சாக்கு போக்கு கூறி தப்பிச்சதே பெரும் பாடாய் போய்விட்டது.

அடுத்த முறை பாத்ரூம் கதவின் அருகே போய்ப் பார்த்து கொண்டிருக்கும் மாலதி குளித்து முடித்து கதவிலிருந்து துணிகளை உருவி எடுத்துவிட்டாள், சரியாக பார்க்க முடியாமல் ஏமாந்து திரும்பி விட்டேன் 

இன்று அருமையான சந்தர்ப்பம், அவளுடைய வீட்டுக்காரர் ஊருக்கு போயிருப்பதாக வேலைக்காரியின் மூலம் தெரிந்து கொண்டேன்.  அதனால் எந்தவித அவசரமின்றி வெகு நேரம் குளிப்பாள்,  இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது எனக் காத்திருந்தேன்.

மாலதி மாநிறமென்றாலும் நல்ல உடல் வாகு. பார்ப்பவர்களை மறுபடியும் பார்க்க தூண்டும்  கவர்ச்சி அவளிடம் உண்டு . அதில் அவளுக்கு ஒருவித பெருமை. குழந்தை இன்னும் இல்லை, அதனாலென்னவோ உடல் கட்டுக்கோப்பை இழக்கவில்லை. 

என் வீட்டு வேலைக்காரி துணியை ஊறவைத்து சென்றுவிட்டால் மீண்டும் மதியம் தான் வருவாள்.  இப்போது அவளும் கிளம்பி விட்டாள், எனக்கு இப்படி ஓர் சந்தர்ப்பம் கிடைத்ததை நெனைச்சு சந்தோசப்பட்டேன்.

பக்கத்துக்கு வீட்டில் வெளியே சத்தம் கேட்டது, ஆம் மாலதி தான் குளிப்பதற்கு தயாராகி விட்டாள், அவள் வெந்நீரை விளாவும் சத்தம் கேட்டது. என் வீட்டு காம்பவுண்ட் , மாலதி வீட்டு பாத்ரூம் சுவரை ஒட்டி இருப்பதால் அங்கு ஏற்படும் சத்தம் நன்றாக கேட்டது .  எனக்குள் படபடப்பு அதிகரித்தது. மெதுவாக ஈரத் துண்டு காய வைக்கும் சாக்கில் வெளியே வந்து நோட்டமிட்டேன். என் வீட்டு கம்பவுண்டிலிருந்து பக்கது வீட்டிற்கு  செல்ல ஓர் இடை வெளி உண்டு. அதில் தான் வேலைக்காரி வந்து செல்வாள்.

இப்போது மாலதி மாற்று துணிகளோடு பாத்ரூம் பக்கம் செல்வதை பார்த்தேன். மெதுவாக  நகர்ந்து அவளுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டேன். சிறிது நேரத்தில் பாத்ரூம் கதவு மூடும் சத்தம் கேட்டது. எனக்கு உள்ளுக்குள் மணியடித்தது. அக்கம் பக்கம் திரும்பி பார்த்து பாத்ரூம் அருகே சென்றேன்.

அப்போது மறுபடியும் மணியடித்தது, நம் மனசுக்குள் மணியடித்தால் இவ்வளவு சத்தமாகவா கேட்கும் என என்னை நானே கேட்கும் போது வெளியே நாய் குறைக்கும் சத்தம். மறுபடியும் மணி அடிக்கும் சத்தம், அட கஷ்ட காலமே ! நம் வீட்டில் தான் யோரோ ! காலிங் பெல் அடிக்கிறார்கள். யாரடா இது, பூஜை வேளையில் கரடி. விட்டுவிட்டு போகவும் மனசில்லை, மறுபடியும் பெல் சத்தம்,

வேகமாய் வீட்டிற்குள் போய் கதவை திறக்காமல் யாரது என எரிச்சல் கலந்த குரலில் கேட்டேன்.

பழைய பேப்பர் இருக்குங்களா? வரச்  சொல்லியிருந்தீகளே! என்றான் பழைய பேப்பர்காரன். இல்லப்பா ! அடுத்த வாரம் வா, சேர்த்து தாரேன் என்றேன் அவசரமாக. இருப்பதை கொடுங்க, பிறகு அடுத்த மாசம் தான் வருவேன் என்றான். இப்போ இல்லையப்பா, எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது, அடுத்த மாதம் வாங்கிக்கோ! என்று அவசரப்பட்டேன், சரிங்க ... என கூறி சென்று விட்டான்.

இவனுகளுக்கு நம்ம அவசரம் தெரியறதில்ல! என புலம்பியவாறு வேகமாக பின் புறம் சென்றேன், அதற்குள், மாலதி சோப் போட ஆரம்பித்திருந்தாள், மைசூர் சாண்டல் மனம் தூக்கியது.  மெதுவாக காம்பவுண்ட் இடை வெளியில் நுழைந்து ஓசைப்படாமல் மாலதி குளிக்கும் பாத்ரூம் கதவை நெருங்கினேன் .
அதில் பச்சை நிற சேலை, மாட்சிங் ப்ளவுஸ், பாவாடை தொங்கியது. முக்கியமான உள்ளாடையை காணோமே என்று கண்களை இடுக்கி பார்த்தேன். பாவாடைக்கும் பிளவுசுக்கும் இடையில் அந்த கருப்பு நிற பிரா தொங்கியது.  அதில்  வெள்ளை நூலில்  தைத்திருந்த ஊக்கு அது  என்னுடைய பிரா தான் என எனக்கு அடையாளம்  காட்டிற்று.   அப்பாடாநாம் நெனைச்சது கரெக்ட் தான், போன வாரம் தொலைந்து போன என கருப்பு பிரா இதே தான்.

இந்த வேலைக்காரி, பக்கத்துக்கு காம்பவுண்டில் காற்றடித்து விழுந்து விட்ட என் துணிகளை எடுக்கும் போது இதை மறந்து விட்டாள். இந்த சந்தேகம் எனக்கு அப்போதே வந்து அவளை விசரரித்தும் பார்த்துவிட்டேன், அவள்  எல்லா துணிகளையும் எடுத்து விட்டதாக சாதித்தாள்.

நேரடியாக மாலதியையே கேட்கவும் பயமாயிருந்தது, அவள் வெடுக்கென்று எதாவது சொல்லி விடுவாள். அதனால் தான் நாமே அவள் குளிக்கும் போது கண்டுபிடித்து விடலாமென்று, இன்று பார்த்துவிட்டேன். நாளை போய் தைரியமாய் கேட்டுவிடலாம், என்ன சொல்லுகிறீர்கள் !

வியாழன், 16 பிப்ரவரி, 2012

மருத்துவ காப்பீடு எடுக்கப் போகின்றீர்களா?


மக்களின் இப்போதைய தேவை மருத்துவக் காப்பீடு. மருத்துவ செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால் தான் மக்களும் எதாவது ஓர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளத் தயாராகி வருகின்றனர் . தற்போதைய தொலைக்காட்சி விளம்பரங்களும் மருத்துவ காப்பீட்டின் அவசியத்தினை மக்களிடம் அதிகமாய் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியுள்ளன.
இப்போது மார்ச் மாதம் நெருங்குகிறது! வருமான வரி செலுத்துபவர்கள், தங்கள் வரிவிலக்கிற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய காத்திருக்கும் தருணம் இது.  இத்தருணத்தை எதிர்நோக்கி காப்பீடு செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ‘ கொக்கு மீனுக்காக’ காத்திருப்பதை போல் தயாராக உள்ளனர். நமக்கும்  எதாவது ஒரு திட்டத்தில் சேர்ந்து காப்பீட்டு பத்திரம் வாங்கி அலுவலகத்தில் சமர்பித்தால் போதும்! அது தான்  இப்போதைய தேவை. அதைவிட்டு சேரும் திட்டம் நல்லதா அதனால் என்ன பயன் என்று ஆராய நேரமில்லை.
நமது ஏஜெண்டும், பல்வேறு கதைகளை கூறி நம்மிடம் பாலிசி பெறுவதிலேயே குறியாய் இருப்பார்.  “நான் பார்த்துகிறேன் சார், நாங்க எத்தனை பேருக்கு  பாலிசி எடுத்து கொடுத்து காப்பீடு செய்து உதவியிருக்கோம்” என்று  உங்கள் எதிர்காலமே அவர்கள் கையில் தான் என்ற வகையில் உங்களை ஏதோவொரு திட்டத்தில் சேர்த்து விட்டுவிடுவர். நாமும் அதோடு அதனை மறந்து விடுவோம்.
ஆனால், நமக்கு எதாவது உடல் கோளாறு ஏற்ப்பட்டு மருத்துவமனைக்கு போனால் தான், அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் தெரிய வரும். ”உங்களுக்கு ஏற்கனவே இந்த வியாதி இருந்திருக்கிறது, பாலிசி போடுவதற்கு முன்னமே ஏன் தெரிய படுத்தவில்லை, உங்களுக்கு இதில் மருத்துவ காப்பீடு அளிக்க இயலாது, உடனே பணத்தை காட்டுங்கள்” என்று எல்லாம் கூறி நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடும் போதுதான், பாலிசியின் உண்மை சொருபம் தெரிய வரும்.
இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க நாம் பாலிசி போடுவதற்கு முன் அதைப் பற்றி நன்கு அறிந்து இருக்க வேண்டும், நம் ஏஜென்டிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, நமக்கு எதாவது வியாதி இருக்கின்றதா, இல்லையா என முன் கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்து அதனை நம் விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம், எதற்கு தேவை இல்லாமல் மருத்துவ பரிசோதனை, நமக்கு வியாதி எதாவது இருக்கவா போகிறது, வயது நாற்பது தானே ஆகிறது என நினைத்து விட்டு விட்டால் சங்கடம் நமக்கு தான்.
இப்படிச் செய்வதால், பாலிசியின் கட்டணம் கூடலாம், அதை நம் சரியாக கணித்திருக்க வேண்டும். பொதுவாக மருத்துவ காப்பீட்டு பலன்கள் நிராகரிக்கப்படுவதற்கு  முக்கிய காரணங்களில் ஒன்று , நாம் முன் கூட்டியே நமது உடல் கோளாறு பற்றிய உண்மைகளை மறைத்திருப்பது, அல்லது கூறாமலிருப்பது தான். இந்த அடிப்படியிலேதான் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள்  அதன் பலனை நிராகரிக்கின்றன .  முடிந்தவரை நமது உண்மை நிலையை முன் கூட்டியே தெரிவித்து இருப்பது நல்லது.
ஏஜென்ட் தட்டிக்கழித்தாலும் நாற்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து அதன் விவரங்களை தெரிவித்து இருப்பது நலம். உதாரணமாக, நமக்கு சக்கரை வியாதி சம்பந்தமான அறிகுறி மருத்துவ பரிசோதனையில் இல்லை என வைத்து கொள்ளலாம். இதன் மருத்துவ சான்றிதழை ஏற்கனவே கொடுத்திருந்தால், பிறகு நமக்கு சக்கரை வியாதி வந்து அதற்க்கான மருத்துவம் பார்க்கும் போது உங்கள் மருத்துவ காப்பீட்டில் சந்தேகம் எழவே வாய்ப்பில்லை, ஏனென்றால் நீங்கள் ஏற்கனேவே உங்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என முன்கூட்டியே ஆதாரத்தோடு கொடுத்திருக்கின்றீர்கள் . ஆனால்,  இதனை நீங்கள் கொடுக்காத பட்சத்தில், உங்கள் பெற்றோருக்கு சக்கரை வியாதி இருந்திருந்தால் மருத்துவக் குழு, உங்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்கனவே இருந்திருக்கின்றது, ஆனால் நீங்கள் அதனை மறைத்து காப்பீடு செய்துள்ளீர்கள் என உங்களுக்கு எதிராக நிருபிக்க வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, மருத்துவ சோதனை முன்கூட்டியே செய்து விண்ணப்பிப்பது மிகவும் முக்கியம்.
சில நிறுவனங்கள் காப்பீடு செய்தவர்களின் நண்பர்கள், சொந்தங்கள், மற்றும் அக்கம் பக்கத்தாருடன் நண்பர்கள் போல் பேசி, உங்களுக்கு ஏதேனுமொரு பிரச்சனை முன் கூட்டியே இருக்கின்றதா என்று விவரங்கள் சேகரிக்க ஆட்களை அனுப்புகின்றதாக தகவல். இந்த மாதிரி நேரங்களில் உங்களின் மருத்துவ சான்றிதழ் தான் கை கொடுக்கும். ஏனென்றால், இந்த மருத்துவ பரிசோதனை செய்பவர்கள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தான். ஆகவே, உங்கள் வாதம் தான் வெற்றி பெரும்.
மருத்துவ பரிசோதனை செய்ய கடமைப்பட்டவர்கள் யார் யார் என்றால்,
  • 18 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்த பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
  •  31 முதல் 40 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
  •  41 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் மற்றும் விரிவான பரிசோதனைகள் விவரம் தேவைப்படும்.

மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் ஒரு வாரத்திற்கு முன் நம்மை நாமே தயார் செய்து கொள்ளவேண்டும்.   நாம் உட்கொள்ளும் உப்பு , இனிப்பு போன்றவற்றின் அளவை எப்போதையும்விட குறைத்தே எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு சம்பந்தமான உணவு பதார்த்தங்களை தவிர்த்து கொள்ளுதல் நலம் . புகையிலை போன்ற லாகிரி வஸ்துகளை அறவே தொடக்கூடாது. நன்றாக உறங்கி நம் இரத்த அழுத்தத்தை சீராக்கி கொள்ளவேண்டும்.  அதிகமான உடற்பயிற்சி, நடை பயிற்சி வேண்டாம். இதனால் நம் உடல் உறுப்புகளின் செயல் பாடு சீராக இருக்க உதவும். இப்போது செய்யப்படும் மருத்துவ சோதனையானது நம் உடலின் உண்மையான செயல் பாட்டை தெரியப்படுத்தும், மேலும் நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அறிந்து கொள்ளலாம்.
மருத்துவ காப்பீட்டிற்காக நாம் செய்து கொள்ளும் இந்த மருத்துவ பரிசோதனையானது நமக்கு நன்மை தான் பயக்கும் !.


புதன், 28 ஜூலை, 2010

வாழக் கற்றுக் கொள் மானிடா !

வாழக் கற்றுக் கொள் மானிடா !

ஊதுங்க! நல்லா ஊதுங்க#351382#351382

ஊதுங்க! நல்லா ஊதுங்க#351382#351382

குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்#351404#351404

குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்#351404#351404
சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !#351935#351935

வெள்ளி, 4 ஜூன், 2010

19வது உலக கோப்பை கால் பந்து ஓர் கண்ணோட்டம்

32 நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் 19வது உலக கோப்பை கால் பந்து போட்டிகள் வரும் ஜூன் 11 ஆம் தேதி தென் ஆப்பரிக்க நாட்டில் கோலாகலமாக துவங்க உள்ளது. இதுவரை நடந்த 18 போட்டிகளில் ஐந்து முறை பிரேசிலும் , நான்கு முறை இத்தாலியும் மூன்று தடவை ஜெர்மனியும், இரண்டு தடவை அர்ஜென்டினாவும், உருகுவேயும் ஒரு முறை இங்லாந்தும், பிரான்சும் வெற்றி பெற்றுள்ளன.
2006 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த போட்டியில் இத்தாலி, பிரான்சை வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இதில் பிரான்ஸ் வீரர் ஜிடேன தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த இத்தாலி வீரர் மார்கோ மட்டேர்ஜியை தலையால் முட்டி நிலை குலைய செய்ததை உலகம் இன்றும் மறக்காது.
பல்வேறு பிரச்சன்னைகளுக்குப்பின் அர்ஜென்டினாவின் பயிற்சியாளராக உருவெடுத்திருக்கும் பிரபல வீரர் மரடோனோ, இந்தமுறை தனது அணி கோப்பையை வெல்லும் என உறுதி கொண்டிருக்கிறார். அப்படி நடக்கும் பட்சத்தில் அதை கொண்டாடும் விதமாக மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்றும் சூளுரைத்திருக்கின்றார்.
இந்த உலக கோப்பையில் விளையாடவுள்ள பந்தின் பெயர் "ஜபுலாணி" என்பதாகும். இதற்க்கு "கொண்டாட்டம்" என்று பொருள். இதில் 11 வண்ணங்கள் உள்ளன. இது கால்பந்து வீரர்கள் எண்ணின்க்கை 11 ஐ குறிக்கும், மேலும் இந்த போட்டியை நடத்தும் நாட்டிலுள்ள 11 இன மக்களையும், அங்கு பேசப்படும் 11 மொழிகளையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வீரர்களிடையே இந்தப் பந்தைப்பற்றி கொண்டாடமில்லை. இது ஒன்றும் சொல்லி கொள்ளுவது போல் மிதக்கும் பந்து அல்ல, சூப்பர் மார்க்கட்ல் விற்கப்படும் பிளாஸ்டிக் பந்து போலுள்ளது என்று வீரர்களிடையே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இப்படி பலவிதமான எண்ணங்களுடனும், ஆரூடங்களுடனும் ஆரம்பிக்க இருக்கும் இப்போட்டியானது வரும் ஒரு மாத காலத்திற்கு ரசிகர்களின் தூக்கத்தை மறக்க செய்யப்போவது என்னமோ உண்மைதான்.
இப்போதே, எல் சி டி தொலைக்கட்சிபெட்டிகளும், சாட்டிலைட் ஓளிபரப்பும் தங்கள் வியாபாரத்தில் சூடு பிடிக்கத்தொடங்கி விட்டன.

வியாழன், 17 டிசம்பர், 2009

மனித குலத்திற்கே அவமானம்
டென்மார்க் நாட்டில் தற்போது, புவி வெப்பமடைவது குறித்து மாநாடு நடை பெற்று வருகிறது. ஆனால், அந்த நாட்டில் பெரோயி தீவில் ஆண்டுதோறும் நடை பெரும் இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் கொலைவெறி கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான டால்பின் மீன்கள் பாரபட்சமின்றி வெட்டிக் கொல்லப்படுகின்றன. மனிதர்களிடத்தில் அன்பு பாராட்டும் இந்த சாதுவான ஜீவன்கள் தங்களை நம்ப வைத்து கொலை செய்யும் இந்த பாவிகளை இன்னும் நண்பர்களாகத்தான் எண்ணி பழகுகின்றன. இந்த பாதகமான செயல்களால் மனித குலமே வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது. இந்த கொடுமையான செயல்களை சுற்றுப்புற ஆர்வலர்கள் இதை தடுக்க முயல வேண்டும் .




















இப்படிப்பட்ட வீரம் தேவை தானா?





































































புதன், 16 டிசம்பர், 2009


பழம் தின்று கொட்டை போட்டவர்கள்

நாம் வேடிக்கையாக சிலரைப் பார்த்து "பழம் தின்று கொட்டை போட்டவர்" என்று சொல்வதுண்டு. ஆனால் அது பறவைகளுக்கு தான் பொருந்தும். ஆம் ! பறவைகள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக காடு விட்டு காடு தாண்டி, கடல் தாண்டி, கண்டம் தாண்டி செல்கின்றன. அப்படி போகும் போது, வழியில் உள்ள மரங்களின் கனிவகைகளை தின்று கொட்டைகளை போட்டுச் செல்லும். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கேட்கத் தோணும். பறவைகளின் இந்த பழம் தின்று கொட்டை போடும் பழக்கமானது, தாவர இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறதென்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம். சற்று விவரமாக பார்ப்போம்.

பறவைகள், வழியில் உள்ள மரங்களின் கனிவகைகளை தின்று இளைப்பாறிச்செல்லும். போகும் போது, அது தின்ற கனிகளின், சதை பகுதி மட்டும் அதன் வயிற்றில் செரிமானம் ஆகி, கொட்டைப்பகுதியை அதன் எச்சத்துடனோ அல்லது அப்படியே சாப்பிடாத கொட்டையாகவோ வழியில் இட்டுச் செல்லும். இப்படி கிழே விழுந்த கொட்டைகள் , மண்ணில் விழுந்து முளைத்து, பெரிய தாவரமகிறது. இதை சில சமயங்களில் நாம், பெரிய கட்டிடங்களில் கூட மரங்கள் வளர்வதை பார்த்திருக்கிறோம்..


பறவை ஆராய்ச்சியாளர்கள் பழம் தின்று கொட்டைப்போடும் பறவைகளின் இந்த செயல்களால், தாவர இனப்பெருக்கம் அதிகமாக நடக்கிறது என்றும், அந்நிய தாவர இனபுகுதலும் இதனால் சாத்தியமாகிறது என்றும் கண்டு பிடித்துள்ளனர். மேலும் உலகின் சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் புவி வெப்பமாவது காடுகளின் செழிப்பால் தடுக்கப்படுகிறது.. மக்களின், தேவைகளுக்காக காடுகள் ஒரு பக்கம் அழிக்கப்பட்டாலும்,

பறவைகளின் மூலம் தாவர இனப்பெருக்கம் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது என்பது தான் உண்மை. பறவைகள் தங்கள் சுயநலத்திலும், பொதுநல சேவை செய்கின்றன. அதிலும், சில குறிப்பிட்ட பறவை இனங்கள் தங்கள் இரைக்காக அதிக பழங்களை அடிக்கடி உண்டு, நிறைய கொட்டைகளை போடுவதால், தாவர இனப்பெருக்கம் தடையின்றி இருப்பதாக சொல்கிறார்கள். அதனால்,பழம் தின்று கொட்டை போடுவதை இனிமேல் சாதரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

பதிவர்கள் பலவிதம்!

பதிவர்கள் பலவிதம் என்ற தலைப்பில் பதிவர் நண்பர்கள் பலர் கூடி விவாதித்துள்ளனர், இதனை நண்பர் லதானந்த் தன பதிவில் சுவைபட எழுதி இருந்தார். அதில், பதிவர்களின் தன்மை, வகை பற்றி பார்க்கும் போது நகைச்சுவையாக இருந்தாலும் அதன் கருத்து என்னவோ ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

இன்றைய பதிவர்கள் தமெக்கென்று தனி பாணியை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களின் தகவல்கள் புதியவையாக இல்லாவிடினும், பதிவில் அதை சொல்லும் முறையில் தான் மற்றவர்களால் ரசிக்கப் படுகிறார்கள்.

பதிவர்களின் அணுகும் முறையை பற்றி சில சுவையான விதங்களை பார்ப்போம்.

சமையல் குறிப்புப் பதிவர்கள்
நெட்டுலயோ சமையல் பொஸ்தகங்களையோ ’சுட்டு’ சொந்த வார்த்தைகளில ‘தாளிச்சு’ப் பரிமாறிருவாங்க.

உலக எனிமா சாரி சினிமாப் பதிவர்கள்
இவிங்க கொல தெய்வம் கூகிளாண்டவர்.

சமுதாய முன்னேத்திப் பதிவர்கள்
அப்பப்ப திங்க் பண்ணி சமுதாயத்த முன்னேத்த கடுமையா முயற்சி பண்ணிட்டு மறுக்காவும் தங்க வேலையப் பாக்கப் போயிருவாங்க. ”ரெட் சிக்னல்ல நிக்காம போனவனப் பாத்து எனக்கு அஞ்சு நிமிசம் எதுவுமே சாப்புட முடியாம போச்சு லெஃப்டல ஓவர் டேக் பண்ணுனவனப் பாத்து மூட் அவுட்டாயி உண்ணொரு “போத்தல்” அடிச்சேன்”கிற மாதிரி சமுதாய ஒணர்வு மிக்கவிங்க இவிங்க.

ஏதாவது செய்யற” பதிவர்கள்
நெமபப் பொறுப்புணர்ச்சி மிக்கவிங்க இவிங்க.லேத், டிங்கரிங், பெயிண்டிங், ரிவிட், மாதிரியான வேலைக்கெல்லாம் ஏற்பாடு செய்வாங்க.

பல கூடுப் பதிவர்கள்
ஒண்ணுக்கு மேல பதிவுகள் வெசிருப்பாங்க. (ஒண்ணுக்குனா தப்பா நெனைச்சிராதீங்க! ஒரே ஆசாமி பல பதிவுகள் வெச்சிருப்பாங்கனு சொல்ல வந்தேன்). சொந்தமா எழுதுறதுக்கு ஒண்ணு. மத்தவிங்களத் திட்டுறதுக்கு ஓண்ணுனு இருக்கும். அனானியாய்க் கமெண்ட்டு போட முடியாத சீழ்நெலமையிலும் சாரி - சூழ்நெலமையிலும் கமெண்ட் மாடரேட் பண்ணியிருக்கிறப்போவும் திட்டுறதுக்காகவே ஒரு அய்டி கிரியேட் பண்ணி இருக்குற புண்ணியவானுங்க இவிங்க.

நாட்குறிப்புப் பதிவர்கள்
“காலைல எந்திரிச்சேன். காப்பி குடிச்சேன். கரகரனு வந்துச்சு. ஆபீஸ் போனேன். அங்கியும் வந்துச்சு”. அப்படினு ஆனந்தரங்கம்பிள்ளைனு நெனைசுக்கிட்டு ”அபூர்வ தகவல்களை” அள்ளி வீசுவாங்க. (ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு பத்தித் தெரியாதவிங்களுக்கு சந்திரமௌளீஸ்வரன் விளக்கம் தருவாரா?)

டபுள் ஆக்ட் பதிவர்கள்
ஒரே பதிவரு ஒரே பிளாக்குல ரெண்டு பேர் பேர்ல எழுதுவாங்க. மாறி மாறி அவிங்களே பின்னூட்டமும் போட்டுக்குவாங்க. நெம்ப டமாஸா இருக்கும்.

டூப்ளிகேட் பதிவர்கள்
ஒரிஜினலா எழுத லேசா கஷ்டம் இவிங்களுக்கு. மித்தவிங்க எழுதுறத லேசா மாத்தி எழுதிக்குவாங்க. கேட்டாக்க எதிர்ப் பதிவும்பாங்க. ”என்னைய நம்பி இருக்கிறவிங்கள் நாம ஏமாத்தக் கூடாது பாத்தீங்களா?” அப்படிம்பாங்க. ஒரு கான்ஸப்ட் ஹிட் ஆயிருச்சுனா அத ஒடனடியா லபக்கீருவாங்க.

பச்சோந்திப் பதிவருங்க
பிளாக்குல ஆகா ஓகோனு முன்னேத்தக் கருத்துங்கள திருகலான நடையில எழுதுவாங்க. எழுதுன ஈரம் காயறதுக்குள்ள கூசாம சிபாரிசுக்கும் போவாங்க.

சரோஜாதேவிப் பதிவருங்க
இப்பல்லாம் சரோஜாதேவி புக்ஸ் அதிகமா இல்லைங்கிற கொறைய இட்டு நெரப்புறவிங்க இவிங்க. மண்டை கிண்டைனு சரளமா எழுதுவாங்க. பீர்ல 3000, 5000 அப்படினு இருக்கிற மாதிரி நெம்பர் போட்டு விட்டு ஆட்டுவாங்க.

நாட்டாமைப் பதிவர்கள்
பதிவுலகத்துல எங்க எப்பச் சண்டை சாடி நடந்துச்சுனாலும் இவிங்களுக்குக் கொண்ட்டாடம்தான். ஒடனடியாப் போயி அதிரடியா நாட்டாமை பண்ண ஆரமிச்சிருவாங்க. சமயத்துல திருக்குறள் எல்லாம் கோட் பண்ணுவாங்க.

பரஸ்பரக் கைப் பதிவர்கள்
எனக்கு நீ ஒனக்கு நான் அப்படிங்கிற உயரிய கோட்பாடு இவிங்களது. இவிங்களுக்கு ‘மொய்க்கு மொய்ப் பதிவர்கள்’னு உண்ணொரு பேரும் இருக்குது.

டவுன்லோடு பதிவர்கள்
எதப் பத்தி வேணும்னலும் எழுதுவாங்க. பறவைக் காச்சலா, பணியாரம் சுடுறதா, கேட் வாக் பத்தி எழுதுறதா கேக் செய்யிறதப் பத்தி எழுதுறதா எத வேணும்னாலும் எழுதுவாங்க. டவுன்லோடு இருக்கறவரைக்கும் இவிங்க அதி மேதாவிங்கதான்.

மெனி இன் ஒன் பதிவர்கள்
பர்மா பஜார் பாஷையிலும் எழுதுவாங்க பண்டிதன் மாதிரியும் எழுதுவாங்க. கொங்குப் பேச்சிலும் எழுதுவாங்க கொமுரிகளப் பத்தியும் எழுதுவாங்க.
நன்றி திரு லதானந்த் http://lathananthpakkam.blogspot.com

செவ்வாய், 21 ஜூலை, 2009

இந்தியாவில் மிக நீளமான ரயில்வே பாலம்


கேரளமாநிலம், கொச்சியில் இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பாலம் வேம்பநாடு குளத்தின் குறுக்காக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் நீளம் 4.62 கி மீ ஆகும். இதற்க்கு, முன்பாக பிகார் மாநிலத்தின் தெஹ்ரி அருகில் சோனே நதியின் குறுக்காக உள்ள நேரு சேது ரயில் பாலம் தான் மிக தூரமனதாக கருதப்பட்டு வந்தது. இப்போது, இந்த வல்லர்பதம் பாலம் அதை விட ஒரு கி. மீ. அதிகமாக அமைய உள்ளது. இந்த பாலமானது, மிக குறுகிய காலத்தில், அதாவது பதினெட்டு மாதங்களில், சுமார் ரூ 297.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கிட்டதட்ட 36000 டன் சிமெண்டும், 11,000 டன் இரும்பும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்காக 133 தூண்கள் நீருக்குள் சுமார் 40 - 55 அடி ஆழத்தில் அஸ்திவாரம் போடப்பட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த பெருமை மிக்க வல்லர்பதம் ரயில் பாலமானது வரும் நவம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

திங்கள், 15 ஜூன், 2009


மகள் இறந்த துக்கம் கலைவதற்குள் மைக் டைசனின் மறுமணம்


ஹெவி வெயிட் குத்து சண்டை வீரரும் பிரச்சனைகளும் இணைபிரியாத மனிதருமான மைக் டைசனின் நான்கு வயது மகள் 'எக்ஸடஸ்" சமீபத்தில் உடற்பயிற்ச்சி சாதனதிலுள்ள கேபிளில் சிக்கி உயிரிழந்தார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மீடியாக்கள், டைசன் வாழ்வில் இது ஒரு பேரிடி என்றும் அவருக்க வருந்துவதாகவும் கருத்துகள் தெரிவித்து இருந்தன. சச்சரவுகளில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் டைசன் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் குத்து சண்டை போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார் என்பது தெரிந்ததே!. இந் நிலையில் இந்த சம்பவம் அவருக்கு மிகவும் அதிர்ச்சியடைய செய்திருந்தது. ஆனால, மகள் இறந்து சில நாட்களே ஆன நிலையில், டைசன் தனது பெண் நண்பரான "லக்கிகா ஸ்பைஸர்" என்பவரை மணந்துள்ளார். இவ்ர் . இதன் மூலம் டைசனுக்கு, மூன்றாம் மனைவி ஆகிறார். மகளின் மரணத்திற்கு துக்கம் சொன்னவர்கள் இப்போது வாழ்த்துவார்களா ?

செவ்வாய், 2 ஜூன், 2009

சந்தோசமான ஊழியராக இருக்க யோசனைகள் பத்து

உங்களுக்கு நினைவு இருக்கிறதா? .... என்றைக்காவது .. அதிகாலையில் மிகவும் ஆர்வத்துடன் எழுந்து, புறப்பட்டு தயாராகி இருந்தது. அது, உங்கள் கல்லுரி ஆண்டு விழா அல்லது ஏதாவது போட்டி தேர்வு, ஏன் உங்கள் திருமண நாளாக இருக்கலாம். அல்லது வாரத்தின் முதல நாள் திங்கள் கிழமை காலை அலுவலகத்திற்கு செல்லும் வேலையாகக் கூட இருக்கலாம். இதில் உங்களுடைய பதில் கடைசியாக சொல்லப்பட்ட காரணம் என்றால், நிச்சயமாக நீங்கள் ஒரு சந்தோசமான ஊழியராக இருப்பீர்கள் .
ஆனால், மேற்கண்ட சந்தர்ப்பங்களால் மட்டும் அவரை சந்தோசமான ஊழியராவார் என சொல்ல முடியாது. அலுவலகத்தில் அவருக்கு கிடைக்கும் உற்சாகமும், தூண்டுதலுமே அவரை சந்தோசமாக இருக்க வைக்கும் மற்ற காரணங்களாகும். மேலும் சந்தோசமாக இருப்பதும் , இல்லாமலிருப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.
ஒரு ஊழியர் சந்தோசமாக இல்லாமலிருப்பதற்கான சில காரணங்களை பார்ப்போம்.
- திறமைக்கு மதிப்பின்மை
- அலுவலக அரசியல்
- ஒத்துழைக்காத சக ஊழியர்கள்
- புரிந்துக் கொள்ளாத அதிகாரி
- வேலைகேற்ற ஊதியமின்மை
- வேலையில் நிரந்தரமற்ற தன்மை
- எந்தவித பொறுப்பில்லா வேலை
- சீரான பதவி உயர்வு
- அமர்ந்திருக்கும் இடம்
- அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலை
இப்படி காரணங்கள் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம். ....
இந்த மாதிரி காரணங்களால், அவர்களிடத்தில் எதிர்மறைக் கருத்துக்கள், செய்யும் வேலையில் ஆர்வமின்மை போன்றவை மேலோங்கி நிற்கிறது இந்த மாதிரி ஊழியர்கள் தான், ஆட்குறைப்புக்கு பலியாகும் முதல் நபர்களாகின்றனர்.
நாம் முதலில் சொன்னது போல், ஒருவரது சந்தோஷமும், துக்கமும் அவர்கள் அதை எடுத்துக் கொள்ளும் முறையிலேயே இருக்கின்றது.
ஆக, சந்தோசமாயிருக்கும் ஊழியா செய்யும் வேலையானது, சந்தோசமில்லாதவரின் வேலையை விட அதிகமாகவும், சிறப்பாகவும் உள்ளது. அப்படி சந்தோசமாயிருக்க உதவும் பத்து யோசனைகளை கீழே பார்ப்போம்.
1) வரும் வாரத்திற்கான வேலைகளை ஞாயிறு இரவே தீர்மானியுங்கள்.
2) உங்களுக்கு சம்பந்தமில்லை, தேவையில்லை என்றாலும் கூட, அதனால் பிறர்க்கு உபயோகமானது, அல்லது சந்தோசம் தருவதானது என்றால் அதைச் செய்ய தயங்காதீர்கள்.
3) மற்றவர் மீது பழி சொல்ல காரணங்கள் தேடும் விளையாட்டை தவிர்க்கவும்.
4) முயன்ற அளவு. மற்றவர்களிடத்தில் உங்கள் கருத்துக்களை நேரடியாகவே பரிமாறிக் கொள்ளுங்கள். தொலைப்பேசி, மின்னஞ்சல் போன்றவற்றை தவிர்க்கலாம்.
5) உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதில் கவனமாய் இருங்கள் .
6) உங்கள் காரியாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முடிந்த அளவு உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் .
7) நீங்கள் சுறு சுறுப்பாக, சந்தோசமாக இருக்கும் பழக்கத்தை ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்ளுங்கள் .
8) அலுவலக அரசியலில் இருந்து விலகியே இருங்கள் .
9) மற்றவர்களின் முயற்ச்சிகளுக்கு வாழ்த்து தெரிவியுங்கள்.
10) அழைப்பை எதிர் நோக்காமல் மற்றவர்களுக்கு அவர் காரியங்களில் உதவி பண்ணுங்கள் .
" மனித வாழ்வின் மகத்துவமே, நீங்கள் மற்றவர்களிடத்திலிருந்து என்ன பெற்றீர்கள் என்பதை விட அவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்பது தான். " - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் .
ஆக, பலனை எதிபார்க்காமல், ஏதாவது ஒரு காரியம் அடிக்கடி இல்லாவிட்டாலும், எப்போதாவது செய்வதற்கு முயற்ச்சி செய்யுங்கள். இதன் மூலம் மற்றவர்களையும் சந்தோசப்படுத்தி ,நாமும் சந்தோசமாய் இருப்போம்.

செவ்வாய், 26 மே, 2009

மன்மதனின் முடிவு

அஞ்சாம் நம்பர் ரூம் சார்! உங்களைத்தேடி யாரோ .... வந்திருக்காங்க,..... லாட்ஜ் வாட்ச்மேன் கீழேயிருந்து கூவினான். இந்த அஞ்சாம் நம்பர்லே நானும், அய்யர் மட்டும்தான் இருக்கோம், அய்யர் நைட் டூட்டி பார்த்துட்டு நல்லா துங்கிகினு இருக்கார். யார்ராது? நம்மாலே தேடிட்டு காலங் கார்த்தாலே, அவுந்த லுங்கிய மடிச்சு கட்டிட்டு வெளியிலே எட்டிப்பர்த்தேன் . பகீரென்றது... அடப்பாவி, இவனா ? ...... இவன் எப்படி வந்தான். மதுரையிலே பக்கத்து தெரு பூதலிங்கத்தோட தம்பி இவன், பேரு பரணி, வெட்டி ஆபிசர், அவங்க அண்ணி எப்ப பார்த்தாலும் இவனை கரிச்சு கொட்டிட்டு இருப்பாங்க, இப்ப சோறு போடாம தொரத்திட்டாங்க போலும் , எப்படியோ நம்ம அட்ரஸ மோப்பம் பிட்டிச்சுட்டு வந்துட்டான்.

இதற்குள் மேலே ஏறி வந்த பரணி, என்ன பாய், சௌக்கியமா..... என்றபடியே உள்ளே வந்தான். ஆங்! .. நீ .. நீ.. எப்படி இங்கே என்று மென்று விழுங்கினேன் . இவனை பார்த்ததுமே பலவித சிந்தனைகள் மனதில் தோன்றி பயமுறுத்தின, இவன் ஏன் இப்போ வந்தான், இங்கத்தான் தங்கபோரனா ? நம்ம பட்ஜெட்டுக்கு, இவன் வேற சோதனையா, எப்படியாவது பேசி, தொறத்திர வேண்டியது தான். என்ன பரணி, திடு திப்புன்னு வந்து நிக்கற!.. என்ன ஊர்லே கடை இருந்ததே ? எப்படி போய்க்கிட்டு இருக்கு, என்று மெதுவாக அவன் வருகை பற்றிய காரணம் அறிய முற்பட்டேன் .
மதுரையிலே லேடி டோக் காலேஜ் பக்கத்துலே அவன் கடையிருந்தது, அதில் முன்னாடி கடை, அதற்குள் ஒரு சிறிய அறை அதுதான் அவனுடைய வீடு. அங்குத்தான் எல்லோர்ருக்கும் சொர்க்கம். பரணிக்கு சிகரெட், குடி பழக்கமெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால், பெண்கள் விசயத்தில் பயங்கர கில்லாடி, எப்படிப்பட்ட பெண்களையும் வசப்படுத்திவிடுவான். அதனாலேயே, அவனை வீட்டுப்பக்கம் சேர்க்கவே பயப்படுவார்கள் என்றால் பாருங்கள்.

காலேஜ் மாணவிகளுக்கு, ஏதாவது ஓசி கொடுத்து, அயன் படத்தில் சூர்யா, தமன்னாவை சரிக்கட்டுவது போல் பேசி அவர்களை வசப்படுத்திவிடுவான். இவனுடைய லீலைகளை கேட்டு ஜொள்ளு விடுவதே மற்றவர்களின் பொழுது போக்கு. இப்படி இருக்கும் போது, தலைவர் காதலில் மாட்டிக்கொண்டு, அவளுக்கு லவ் லெட்டர் எழுதி கொடுப்பது என்வேலையாக இருந்தது . இப்படிதான் பரணியின், கடை மூலதனம் எல்லாம் கரைந்து கடைசியில் கடனில் முழ்கியது. கடன் கொடுத்த பக்கத்து வீட்டு மாமி கடன் வசூலிக்க மாமாவை அனுப்பிச்சு வசூலாகதலால் அவரே பரணியிடம் கடன் வசூலிக்க வந்து பின் அவனின் மன்மத லீலையில் சிக்கியது தான் அங்கு ஹைலைட். பிறகு சாப்பாட்டிற்கே கஷ்ட்டப்பட்டு, அண்ணன் வீட்டிலேயே தஞ்சம், அங்கு பக்கத்து வீட்டுக்காரர் தங்கச்சி அவன் மீது அக்கறைப்பட்டு , சாப்பாடு கொடுக்கப்போக, பட்சி படிந்து விட்டது, இப்படியே மன்மத பானங்களை தொடுத்து, தொடுத்து கடைசியில் வீ . டி நோய்க்காக சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. அப்புறம், நான் வேலைக்காக சென்னை வந்து விட்டபடியால் அவனைப்பற்றி ஏதும் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஆள் நம்மை கிட்டதட்ட நான்கு வருடங்கள் கழித்து என்னைத்தேடி சென்னைக்கு வந்தது கொஞ்சம் ஆச்சரியமும் , கலககமும் அடையச்செய்தது. என்னய்யா ! அப்படி முழிக்கிறே ...... என்று என் நினைவுகளை தகர்த்தான் பரணி. அது வந்து ... ஒண்ணுமில்லை ..... ரொம்ப நாள் கழிச்சு பர்க்கிறேன்லே ......அதான். அவனை குளிக்கச்செய்து, டிபன் சாப்பிட அழைத்துச்சென்றேன். அப்புறம் , என்ன விஷயம், ஊர்லே எல்லோரும் சௌக்கியமா? என்று.... பேச்சை ஆரம்பித்தேன். பின் என் நிலைமையை மெதுவாக சொல்லினேன். இந்தா ..... பாரப்பா, .... இங்க லாட்ஜ்லே ரொம்ப ஸ்ட்ரிக்ட் , கெஸ்ட் தங்கறது பிரச்சனை, வாட்ச்மேன், இரண்டு நாள் தான் பார்ப்பான் ....பின்னே, நீ இங்கே தங்கறது பிரச்சனை தான் .....என் நிலமைய புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன் என்றேன் . .. இதைக்கேட்டதும் ..... நீ ஒன்னும் கவலைபடாதே, என் பெட்டி மட்டும் இங்கே, இருக்கட்டும், மத்ததே நான் சமளிச்சுக்கிறேன்னு, எனக்கு சமாதானம் சொன்னான். அப்போ ... நீ ... எங்க தங்குவே என்று கேட்க முடியாமல் கேட்டேன். இரண்டு, நாள் பார்க்கலாம், என் மாமா இங்கத்தா, ஆவடிலே இருக்கார், அவரைபர்த்துட்டா...அப்புறம் எல்லாம் சரியாயிடும், என்னாலே ஊருக்கு திரும்ப போக முடியாது, என் பிரண்டு இங்க எனக்கு வேலை இருக்கு வான்னு ... சொல்லிருக்கான்அதனாலே, நீ கவலை பட வேணாம்... ரைட் ... உன் பெட்டிய மட்டும் இங்க வச்சுக்க, நான் ஆபிசுக்கு போயிட்டு சயங்கலமா ஆறு மணிக்கு வந்துருவேன், என்று அவன் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்ட நிம்மதியில், பஸ் ஏறி ஆபிஸ் சென்றேன்.
இப்படியே இரண்டு நாட்கள் நகர்ந்தன, ஆனால் அவன் சொன்னபடி மாமாவை கண்டுபிடிக்கவில்லை, தினமும் காலையில் புறப்பட்டுச்செல்வான். மீண்டும், இரவில் வந்து நேராக மொட்டைமாடியில், துங்கிக் கொள்வான் வாட்ச்மேனை, எப்படியோ ... சரிக்கட்டிவிட்டான், அவனை பார்த்தாலே வாட்ச்மேன் சலாம் சொல்கிறான் ..... என்ன செய்வது, எல்லாம் அவன் யோகம் தான். ஊரில் கூட இவன் சாப்பாட்டிற்கு காசில்லாவிட்டலும் அவன் முக ராசிக்கு சாப்பாட்டு அவனைத்தேடி வரும். ஆள் பார்க்க உயரம் கம்மி என்றாலும் நல்ல சிகப்பாக இருப்பான், மீசை வேறு எடுத்து விட்டதால் வடக்கத்தி ஆள் போல் காணப்படுவான். படித்ததோ பத்தாம் வகுப்புத்தான், ஆனால்.. பேசினால் பெரிய புத்திசாலி என் நினைக்க தோணும்.
ஒரு சமயம், அங்கு கல்லுரிக்கு பிரான்ச் மொழி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை, காதரின் இவன் கடைக்கு வந்திருந்தாள். பரணி தன் பட்லர் இங்கலிஷ் மூலம் அவளுடைய நண்பன் ஆகிவிட்டான். அவனுடைய ஓட்டை சைக்கிள் வாங்கிச்செல்ல அடிக்கடி வந்து போக கடைசியில் அவர்கள் உறவு எல்லைக்கடந்து விட்டது. அதனால் தான் எல்லோரும் , அவனிடம்... உனக்கு மட்டும் என்ன மச்சமோ, யார் வேண்டுமானாலும் உன்னிடம் படிந்து விடுகிறார்களே என பொறாமை பட்டதுண்டு.
சில நாட்களாக பரணி ரூம் பக்கம் வரவில்லை, ஏன் என தெரியவில்லை ... நானும் தேட வில்லை. ஒரு நாள் நேராக ஆபிசுக்கே வந்தான். அவன் மாமாவை பார்த்ததாகவும், அவர் வீட்டிற்கே, அழைப்பதாகவும், அதனால் பெட்டியை எடுத்து செல்ல வந்ததாக கூறினான். ஆள், பர்ர்க்க சோக்காக ...இருந்தான் . என் உதவியாளை கூப்பிட்டு, அனைவருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கச்சொல்லி நூறு ரூவாத் தாளை நீட்டினான். அவன் பர்சில், ஒரு நூறு ரூவா கட்டு எட்டிப்பார்த்தது... என்ன ஆச்சர்யம் ..... நேற்று வரை பத்து ரூவா கடன் கேட்டுக்கொண்டிருந்தான் .... இப்போது எப்படி இவ்வளவு பணம், .... வாய் திறந்து கேட்டே விட்டேன் .... எப்படி பரணி,... திடீரென்று பணக்காரனாகி விட்டாய், ஏதாவது லாட்டரி அடித்தாயா ? அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா .... நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனல்லவா என் பிரண்டு இங்கு இருப்பதாக , ....அவர் பிசினசில் என்னையும் பாட்னர் ஆக சேர்த்துள்ளார் .... அதென்னப்பா .....இவ்வளவு பணம் குடுக்கற பிசினெஸ் என்றேன். அது எக்ஸ்போர்ட் பிசினெஸ் .... சரி ,.. உனக்கு என்ன வேணும் சொல்லு .. கடைக்கு போகலாம் ... அதெல்லாம் வேண்டாம் எனக்கு வேலை இருக்கு ... இந்தா சாவி .. ரூம்லே போய் உன் petty எடுத்துக்கோ... சாவியை வாட்ச்மேன்ட்ட கொடுத்துரு... என்று சொன்னேன். இவனின் நடவடிக்கை சரியில்லை என மனம் சொல்லியது.
நாட்கள் நகர்ந்தன , நான் ரூமை காலி செய்துவிட்டு ... சைதாப்பேட்டையில் ஒரு சிறு அறை எடுத்து சென்று விட்டேன் ...... ஒரு நாள் காலையில் வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது, மணி ஆறு இருக்கும், யார்ரென்று பார்த்தல், பரணி ஒரு பெரிய சூட்கேஸ் எடுத்துக்கொண்டு அட்ரெஸ் விசாரித்து கொண்டிருந்தான் ... எனக்கு தூக்கி வாரிப்போட்டது... இவன் நாம் எங்கே போனாலும் வந்து விடுகிறானே ..... வெளியில் போகலாமா வேண்டாமா என ஒரு கணம் யோசித்தேன் ......போகாவிட்டாலும் எப்படியும் கண்டு பிடித்து விடுவான் ...எமகாதகன் என்று திட்டியவாறு கதவை திறந்து அவனை உள்ளே கூப்பிட்டு வந்தேன் .
வந்தவன்என்னப்பா சொல்லாமல் கொள்ளாமல் ரூமை காலி செய்து வந்து விட்டாய், உன் ஆபிஸ் உதவி ஆள் தான் சொன்னான் நீ இங்கு இருப்பதாக..... புரிந்து விட்டது இவன், அவனுக்கு, காசு கொடுத்திருப்பான் ....உடனே அவன் அட்ரஸ் கொடுத்துவிட்டான், ..... சரி என்ன இவ்வளவுபெரிய சூட்கேஸ் , அதுவும் இந்த வேளையில் , என்ன ஊரிலிருந்து வருகிறாயா ?........ என்றேன் ... இல்லையப்பா ஒரு நல்ல பார்ட்டி கிடைத்தது, பிசினஸ் பண்ணி விட்டேன், என்று சொன்னவாறு சூட்கேசை திறந்து உள்ளே இருந்து பொருட்களை வெளியில் எடுத்து போட்டான் ..... அதில் ஒரு குடும்பத்தின் பயணத்திற்கான பொருட்கள் காணப்பட்டன, அதுவும் வெளி நாட்டு பயணியின் போன்ற தாகப் பட்டது, மற்றும் விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் சாமான்கள் இருந்தன.
எனக்கு இலேசாக புரிந்தது .....இவன் எதோ கெட்ட காரியம் செய்கிறான் என்று... அதற்குள் ... அவன் என்னை சமாளிக்கும் விதமாக ... விலை உயர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு ....மற்றவற்றை நீ எடுத்து கொள் எனக்கு இந்தப் பொருட்களை விற்க வேண்டும் என சொல்லிக்கொண்டே கிளம்பினான். எனக்கு .... உடனே கோபம் வந்தது, இங்கே பார் ... நீ .... என்ன செய்கிறாய் என்று எனக்கு புரிந்து விட்டது, சென்ட்ரலில் ரயிலில் வரும் பாரின் பயணிகளின் பெட்டிகளை திருடி கொண்டு வந்து வியாபாரம் செய்து காசு பார்கிறாய் ... அதான் உன்னிடம் இவ்வளவு பணம் . நீ எப்படியோ போ..... ஆனால், என்னை தொந்தரவு செய்யாதே ... நீ மாட்டினால் , உன்னுடைய இந்த பொருட்கள் இங்கு இருப்பதற்காக எனக்கும் ஆபத்து ...இதை எடுத்துக் கொண்டு போய்விடு என்று கத்தினேன்.
உடனே அவன் உனக்கு, எதுவும் வராது, நாளைக்கே நான் வந்து இதை எடுத்து செல்கிறேன் என்று கூறிச் சென்றுவிட்டான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .... அலுவலகம் சென்று நாள் முழுவதும் பயத்துடன் இருந்தேன். இவனால் நமக்கு எப்படிப்பட்டத் தொல்லை இது .
ஒரு முடிவுக்கு வந்தவனாக சாயந்திரம் அறைக்குச் சென்றவுடன் அந்த சூட்கேசில் உள்ள துணிகள், மற்றும் பொருட்களை சுருட்டி ஒரு பையில் திணித்துக் கொண்டு நேரே கூவம் ஆற்றில் போய் அவைகளை வீசி விட்டு வந்தேன். எல்லாம் விலை உயர்ந்த துணிகள், பெண்களின் உள்ளாடைகள், காலணிகள், அலங்காரப் பொருட்கள் என்று பலவிதமானவை அதில் இருந்தன. . மீண்டும் பரணி வரவே இல்லை.
பரணி ஒரு சந்தர்ப்ப வாதி , தன்னுடைய வசதிக்காக மற்றவர்களின் அசௌகரியத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்த பின் அங்குள்ள பக்கத்து வீட்டுப் பெண்ணை கவரத் தொடங்கியுள்ளான், இது தெரிந்த மாமா, அந்தப் பெண்ணை தான் ஏற்கனவே, முயற்சித்துக் கொண்டிருப்ப தாக கூறியுள்ளார். இதனால், மாமாவிடம் முறைத்துக் கொண்டு பக்கத்திலேயே, ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளான் என்றும், தன்னுடைய சம்பாத்தியத்தை பெரும்பாலும் அவர்களுக்காக செலவு செய்வதாகவும் ஊரிலிருந்து வந்திருந்த நண்பர் மூலம் தெரிய வந்தது .
ஒரு நாள் ஆபீஸில் என் உதவி ஆள் முகம் மலர யாருக்கோ முகமன் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தான்., பார்த்தால், பரணி, கழுத்தில் கனமான தங்கச் சங்கலி மினுமினுக்க, கண்டெக்டர் போல ஒரு தோல் பையை தொங்கவிட்டுக் கொண்டுத் தோரணையே மிடுக்காக ஹாய் என கை ஆட்டிக் கொண்டு என்னருகில் வந்து நின்றான். எனக்கு அவனைப் பார்த்ததும் திகைப்பாக இருந்தது.
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, என்ன மைனர் சார், எப்படி இந்தப் பக்கம், நம்மள பார்க்க எப்படி மனசு வந்தது, அய்யா , பெரிய ஆளாகி விட்டிங்க போல, என்று நக்கலடித்தேன். இல்லப்பா, ஒரே பிசி, அதா வர முடியல, அப்படியா , ..... நா நெனைச்சேன் வேலூர் பக்கம் போயட்டியோன்னு நெனைச்சேன் . தோல் பையிலிருந்து நூறு ரூவா கட்டிலிருந்து ஒன்றை உருவி அனைவருக்கும் , காபி , பஜ்ஜி சூடாக வாங்கி கொடப்பா என்று பையனை விரட்டினான். இதை எதிர்பார்த்திருந்த பையன், சந்தோசமாக சென்றான். எல்லாம் பணம் பண்ணும் செயல், நாமும் காசுக் கொடுத்துத் தான் வாங்கி வரச் சொல்கிறோம் . இவன் சொன்ன உடன் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் செல்கிறான்.
இதை தான் மச்சம் என்பதா ! .....என்ன பரணி என்ன கோலம் இது, வர வர பெர்சனாலிட்டி கூடுது, ஏதாவது காசு சேர்த்து வைச்சு ஒரு கடைய போட்டுட்டு , கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகிட வேண்டியது தானே என அவன் பல்ஸ் பார்த்தேன். ஆமாம்பா, அத தான் உன் கிட்ட சொல்ல வந்திருக்கேன். அவன் மாமாவின் பக்கத்து வீட்டுப் பெண்ணை லவ் பண்ணுவதையும், கல்யாணம் பண்ண முடிவு செய்திருப்பதாகவும், அந்த பெண்ணின் வீட்டார் இவனை நன்றாக பார்த்துக் கொள்வதையும் சொன்னான். இது எனக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தும் , அப்படியா என்றேன். .... உன்னை பற்றி தெரியும், நீ ஒரு மதன காம ராஜன் என்றும் அறிவேன். ... கல்யாணம் செய்தால் சரி, சும்மா உன் ஆசைக்கு அடி பணிவதற்காக 'டிராமா ' போடாதே என்றேன், அப்புறம் பெண் பாவம் பொல்லாதது, உன்னுடைய லிஸ்ட் ஏறக் குறைய நூறை தாண்டியிருக்கும். அவர்களின் சாபத்திற்கு ஆளாகாதே என எச்சரித்தேன்.
இல்லப்பா ! ......இப்ப.. நா... திருந்திட்டேன்.. ஊர்லே அப்பா , அக்காகிட்ட போய்ச் சொல்லிட்டு அவங்க சம்மதத்தோட கலயாணம் செய்துக்குவேன். அததுக்கு முன்னாலே உன் கிட்ட சொல்லத்தான் வந்தேன் என்றான். நல்லது நடந்தா சந்தோசம் என்றேன். பிறகு , நிறைய அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தேன். மனதுக்கு நிறைவாக இருந்தது, பட்டணம் வந்துக் கேட்டுப் போனாலும் திருந்தி வாந்தால் சரி தான் எனப் பட்டது. அதைவிட நிம்மதி என்ன வென்றால் , இனி இவன் தொல்லை நமக்கு இராது என்பது தான்.
ஒரு வாரம் கழித்து ஊரிலிருந்து தொலை பேசி அழைப்பு வந்திருந்தது. அதாவது, பரணி பற்றிய விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு சொன்னார்கள். ஏன் என்று புரியவில்லை. மறு நாள் நண்பன் சாரதி, என்னை விட , பரணிக்கு மிக நெருக்கமானவன் ஊரிலிருந்து வந்தவன் என்னை பார்க்க வந்தான். அவன் கூறிய விஷயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது.
பரணி இறந்து விட்டான் என்ற செய்தி தான் அது, அதுவும் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டான் என்பது. என்னால் நம்ப முடிய வில்லை. போன வாரம் தான் என்னிடம் சொல்லிக்கொண்டு சந்தோசமாகப் போனான்.. கல்யாணம் செய்யப் போவதாக சொல்லியிருந்தான், என்ன நடந்தது என்றேன்.
ஊருக்கு சென்ற பரணி, தன் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிட்டு விட்டு, அடுத்த வாரம் புது வீடு பார்த்து விட்டு , அப்பா , அக்காவை அழைத்துக் செல்வதாக சொல்லிச் சென்றுள்ளான். சென்னையில் அவன் கட்டிக்கொள்ள இர்ருக்கும் பெண் வீட்டில் சென்று இந்த சந்தோஷ செய்தியை கூற , அவர்கள் அதை சட்டை செய்ய வில்லை. மாறாக , அந்தப் பெண் அவனை, நீ யாரென்று எனக்கு தெரியாது எனக் கூறி அனைவரும் சேர்ந்து அவனை அவமானப் படுத்தி அனுப்பி விட்டனர். பிறகு தான், அவனுக்கு விஷயம் புரிந்தது, இது அவர்கள் , அவனுடைய பணத்தை குறி வைத்து நடத்திய நாடகம் என்று. இதில் , அவனுடைய மாமாவும் உடந்தை.
மனம் நொந்த பரணி, எத்தனயோ பெண்கள் விசயத்தில் கில்லாடியான அவன், இந்தப் பெண்ணின் மூலம் ஏமாற்றப் பட்டுவிட்டது தாங்க முடியாமல் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து விட்டதாக சாரதி சொன்னான். அவன் உடல், போஸ்ட்மார்டம் முடிந்து ஊருக்கு, எடுத்து சென்று விட்டதாகவும் கூறினான்.
பல பெண்களின் வாழ்க்கையில் புகுந்து விளையாடிய இந்த மன்மதனின் வாழ்வு பெண்ணாலேயே அழிந்தது, ஒரு புறம் வேதனையாக இருந்தாலும் , பெண் பாவம் பொல்லாதது என்பது சரியாகி விட்டது.
இன்றும் அவனுடைய, சூட்கேஸ் பார்க்கும் போதெல்லாம், பரணியின் சீர்கெட்ட வாழ்க்கையை மற்றவர்கள் யாரும் பெறக் கூடாது என்று நினைப்பேன் . ஏன் நீங்களும், இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கு கூறலாமே ! .
(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html)

வியாழன், 21 மே, 2009

தமிழ் நாட்டு அரசியலும், பிரபாகரனின் மரணமும்

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் என் பிள்ளைகளுக்கு காபினெட் பதவி வாங்குவதிலேயே என்று கண்ணும் கருத்துமாய் டெல்லியில் தவமிருக்கும் தமிழ்நாட்டு முதல்வருக்கு பிரபாகரன் பற்றிய செய்திகள் கலக்கமடைய செய்தாலும், அதைப்பற்றி துளியும் சட்டைசெயயாமல் முதலில் போனவேலை ஆகட்டும் , பிறகு பிரபாகரனை பற்றி ஒரு இரங்கற்ப்பா முரசொலியில் எழுதி வெளியிட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். அப்புறம் வீரமணியிடம் சொல்லி ஒரு மனித சங்கிலி , உண்ணா விரதம் போன்றவை நடத்திவிட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டால் பிரபாகரனை நாடு மறந்து விடும், அப்புறமென்ன, அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை சமாளித்து விடலாம். பிரபாகரன் இருந்தாலும் அரசியல் , இறந்தாலும் அரசியல். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !
வரும் சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு, ராமதாசையோ , விஜய்காந்தையோ இப்போதே தயார் செய்ய வேண்டும். நமக்கு பிரபாகரன் இருந்தால் என்ன ? செத்தால்என்ன ? தமிழ் எனக்கு உயிர் மூச்சு, அங்கே தமிழனின் உயிர் போச்சு, எனக்கு என் குடும்பம்தான் பெருசு. மக்கள் எப்போதும் இளித்தவாயர்கள் . எப்படியும் அரசியல் செய்துவிடலாம்.

பிரபாகரன் சாகவில்லை

பிரபாகரன் இறந்து விட்டார் என சொல்லப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்று செய்திகள் வருகின்றன. அதற்கு சாதகமாக இந்த தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது, பிரபாகரனின் உடல் என்று சொல்லப்பட்டதில் செய்யப்பட்ட பிரபாகரனின் தோற்றம் போன்ற மாஸ்கின் தடயம். சடலத்தின் முகத்தில் மொழு, மொழு வென்ற ஷேவ் செய்யப்பட்ட தோற்றம், தலையில் குண்டடிப்பட்டது போன்று வடிவமைக்கப்பட்ட மாஸ்கில் உள்ள கிழிசலின் பொய்த்தோற்றம், மேலும் இலங்கை இராணுவத்தின் மரபணு சோதனை என்கின்ற புளுகு ஆகியவை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதனை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. இதற்கு சாட்சியாக பிரபாகரன் தன்னைப்பற்றிய பொய்ச்செய்திகளை தொலைக்காட்சியில் ரசித்துப்பார்க்கும் காட்சி பிரபாகரன் பற்றிய உண்மையை புட்டு வைக்கிரறது.

பிரபாகரன் உயிருடனிருக்கிறார் ?

பிரபாகரன் என்று சொல்லப்பட்ட சடலத்தின் முகத்தில் மொழு, மொழு என்ற ஷேவ் செய்யப்பட்ட மாஸ்கின் தோற்றம்.

பிரபாகரன் உயிருடனிருக்கிறார் ?


பிரபாகரனின் உடல் என்று சொல்லப்பட்டதில் செய்யப்பட்ட மாஸ்கின் தடயம்.

பிரபாகரன் உயிருடனிருக்கிறார் ?

பிரபாகரன் தன்னைப்பற்றிய செய்திகளை ரசிக்கும் காட்சி.



செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரன் மரணத்தால் யாருக்கு லாபம் ?

இலங்கை ராணுவத்தால் சுடப்பட்டு பின் கண்டெடுக்கப்பட்டதாகவும் , அது பிரபாகரனின் உடல்தான் என்று அதை அவருடைய பழைய பார்ட்னர் கருணா உறுதிப்படுத்தியதாகவும் பிரபாகரனின் சடலக் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பியது. அதுமட்டுமின்றி டிஎன்ஏ பரிசோதனையில் அது பிரபாகரன் தான் என்றும், அவரது அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டு உறுதி செய்யப்பட்டது எனவும் அதில் சொல்லப்பட்டது. (வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் http://www.youtube.com/watch?v=EaSL7XinAvk ) இது உண்மையோ , பொய்யோ தெரியாது. ஆனால், இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட கண்டிப்பாக நம்மூர் அரசியல்வாதிகள் முயல்வர்.
பிரபாகரனின் மறைவினால் யர்ருக்கு நன்மை. இந்தியாவிற்க்கா அல்லது இலங்கைக்கா என்றால் அது இந்தியாவிற்குத்தான். சிலருக்கு நிம்மதி பெருமூச்சு, சிலருக்கு அரசியல் ஆதாயம். ஆனால் மக்கள் மனதில் பிரபாகரன் என்றும் ஹீரோ தான். எப்படி சதாமின் மறைவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேப்போல் இப்போதும் நம் மனதில் அவர் நீங்கா இடம் பெற்றுள்ளார் என்பதே உண்மை. இந்த முடிவு மற்றொரு தொடக்கத்துக்கு ஆரம்பமாக இருக்கலாம். அது இலங்கை தமிழர்களின் மறு மலர்ச்சியாக இருந்தால் அவர்களின் தியாகம் வெற்றிப்பெறும்.

திங்கள், 18 மே, 2009

ஆனந்தும் ஆஸ்காரும்

தமிழ் நாட்டிலிருந்து ஏ.ஆர் ரஹ்மான் மட்டும் தான் ஆஸ்கார் வாங்கியுள்ளார் என்று நினைத்தால் தவறு. நமது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் ஆறு செஸ் ஆஸ்கார்களை வென்றுள்ளார் என்பது புதிய விஷயம். அவர் தனது முதல் செஸ் ஆஸ்காரை 1997, -ல் வென்றார். பிறகு வரிசையாக 1998, 2003, 2004 மற்றும் 2007 -க்கான பட்டங்களை வென்றுள்ளார் என்பது சிறப்பு. தற்போது அவர் 2008 -க்கான ஆஸ்காரையும் ஆறாவது முறையாக பெற்றுள்ளார். ஐந்துமுறை செஸ் ஆஸ்கார் பெற்ற ரஸ்யரல்லாத முதல் நபர் இவர் என்பது பெருமை.

வெள்ளி, 8 மே, 2009

மலைக்கா ஷெராவத்தை குடிக்க முடியுமா ?

குலுக்கல்அழகி மலைக்கா ஷெராவத்தை பெயரில் புதிய பானம் ஒன்று ஊற்றி கொடுக்கப் போகிறார்கள். "மில்லியன்ஸ் ஆப் மில்க் ஷேக்" என்ற கடையில் ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களுடன் பாலை கலந்து குலுக்கி பாலில் க்ரீமை மேலே விட்டு இந்த மலைக்கா பானத்தை தருகிறார்கள் . ஏற்கனேவே குலுக்கிய இந்த மலைக்காவை மறுபடியும் குலுக்கினால் இந்த கோடை வெயிலுக்கு நல்லா குளு குளு பானம் தான் என்கிறார் கடைக்காரர். வாருங்களேன் ருசித்து பார்க்கலாம்.

கலைஞர் கருணாநதியின் குடும்பம்


செவ்வாய், 5 மே, 2009

பாக்யராஜ் சொன்ன கருவாட்டு குழம்பு, முருங்கக்காய் கதை.


தேர்தல் பிரசாரம் தமிழ் நாட்டில் சூடு பிடித்துள்ளது. இங்கு சொல்லப்படும் கதைகள் ஏராளம். பிரசாரத்தின் போது நடிகர் பாக்யராஜ் தமக்கே உரிய பாணியில் அரசியல் நடிப்பு பற்றி கூறிய கதை இது. மனைவி ஒருத்தி தன் கணவனுக்கு பிடித்த கருவாட்டு குழம்பும், முருங்கக்காய் சாம்பாரும் செய்து அவனை அசத்த இருக்கும் போது வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்துவிடுகிறார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும், வந்தவர் சமைத்த சாப்பாட்டை முழுவதும் சாப்பிட்டு விட்டால் நமக்கு ஏதும் கிடைக்காது என்று நினைத்து ஒரு நாடகம் ஆடுகின்றனர். அதாவது கணவன் மனைவியை கன்னத்தில் ஓங்கி அறைய, அவள் கதறி அழ ஆரம்பிகிறாள். இதை பார்த்த உறவினர் நிலைமை சரியில்லை என புரிந்து நடையை கட்டுகிறார். உடனே கணவன் எப்படி என் நடிப்பு. நான் அடிப்பது போல் நடித்தேன் அதற்கு அவர் பயந்து சென்று விட்டார் என்றான். அதற்கு மனைவியும், நான் மட்டும் சும்மாவா, அடி விழாமலே அடிபட்டது போல் எப்படி அழுது நடித்தேன் என்றாள். சிறிது நேரத்தில் வெளியில் இருந்து அந்த உறவினர் நான் மட்டும் சும்மாவா! வெளியில் போவது போல் பாவனை செய்து மறைந்திருதேன் என்றார் பார்க்கலாம். இந்த கதையை பாக்யராஜ் அவர்கள் ஜெயலலிதா, வைகோ, மற்றும் ராமதாசின் மக்களை ஏமாற்ற தற்போதைய அரசியல் நடிப்பு பற்றி இப்படி ஒப்பிடுகிறார்.

சனி, 2 மே, 2009

ஒபாமாவின் புது குழப்பம்

ஏற்கனவே கணினி துறையிலிருப்பவர்கள் மடியில் நெருப்பு கட்டிக்கொண்டிருக்கின்றனர். அதை ஊதி மேலும் எரிய வைத்துள்ளார் ஒபாமா. இந்தியாவில், பங்களுருவிலுள்ள கம்பனிகளுக்கு அவுட் சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் இனிமேல் தங்கள் நாட்டிற்குள்ளே உள்ள நிறுவனங்களுக்குள் அவுட் சோர்சிங் செயதால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும் என்று அறிவித்துள்ளார். இது நம்மவர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. கால் சென்டெர் போன்ற துறைகளில் இருப்பவர் பாடு இனி திண்டாட்டம் தான். ஏற்கனவே, ஐடி துறையிலிருந்து அரசு நிறுவனங்களுக்கும், இன்ஜினியரிங் காலேஜ் வாத்தியார் வேலைக்கு போவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.